செய்திகள்

களக்காடு அருகே பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2017-05-24 13:27 GMT   |   Update On 2017-05-24 13:27 GMT
களக்காடு அருகே வீட்டு வேலைகளை செய்ய சொல்லி பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சவுந்தர்யா (வயது17). இவர் தற்போது பிளஸ்-1 படித்து முடித்து விட்டு, பிளஸ்-2 படிக்க வேண்டும்.

இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த சவுந்தர்யாவை வீட்டு வேலைகளை செய்ய அவரது தாயார் செண்டு அம்மாள் கூறியுள்ளார். ஆனால் சவுந்தர்யா, வீட்டு வேலை செய்தால், பள்ளிக் கூடத்துக்கு சென்று படிக்க மாட்டேன் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் அவரை தந்தை சுப்பிரமணியனும், தாயார் செண்டு அம்மாளும் சத்தம் போட்டனர். இதில் மனம் உடைந்த சவுந்தர்யா கடந்த 17-ந்தேதி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சவுந்தர்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News