செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி
ஊத்துக்கோட்டை அருகே பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜனனியை பாம்பு கடித்தது. சென்னை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்ட ஜனனி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கூலி தொழிலாளி. இவரது மகள் ஜனனி (16). போந்தவாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு ஜனனியை கடித்து விட்டது. ஜனனியை சென்னை அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி இறந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கூலி தொழிலாளி. இவரது மகள் ஜனனி (16). போந்தவாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு ஜனனியை கடித்து விட்டது. ஜனனியை சென்னை அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி இறந்தார்.