செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி

Published On 2017-04-28 06:46 GMT   |   Update On 2017-04-28 06:46 GMT
ஊத்துக்கோட்டை அருகே பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜனனியை பாம்பு கடித்தது. சென்னை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்ட ஜனனி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கூலி தொழிலாளி. இவரது மகள் ஜனனி (16). போந்தவாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு ஜனனியை கடித்து விட்டது. ஜனனியை சென்னை அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி இறந்தார்.

Similar News