செய்திகள்

பாபநாசம் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் தீவிபத்து

Published On 2017-04-26 15:50 GMT   |   Update On 2017-04-26 15:50 GMT
பாபநாசம் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே பண்டாரவாடை பரகத் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 50). இவர்கள் மாடி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசியிலிருந்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டிற்குள் தீ பரவியது.

இதுகுறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பாபநாசம் அருகே கோவில்தேவராயன் பேட்டை மேல காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வ முத்துகணேஷ். இவரது வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் தீ பற்றி எரிந்தது.

அதேபோல் பாபநாசம் கானியாளர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (50). இவருக்கு சொந்தமான மூங்கில் தோப்பிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்துக்கள் குறித்து தகவலறிந்து பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Similar News