செய்திகள்

தஞ்சையில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2017-04-26 11:32 GMT   |   Update On 2017-04-26 11:32 GMT
தஞ்சையில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

நேபாள நாட்டில் உள்ள முத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பாஸ்வான் (வயது35). இவர் தஞ்சை மேரீஸ் கார்னர் அருகே உள்ள ஹோட்டலில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவதன்று இரவு மேரீஸ்கார்னர் பகுதியில் ராம்பாஸ்வான் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ்நிலையத்திற்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம்பாஸ்வான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News