செய்திகள்

உத்தமபாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2017-04-26 10:56 GMT   |   Update On 2017-04-26 10:56 GMT
உத்தமபாளையம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். (வயது 57). இவர் கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை நைசாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனோகரனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினரும், சிறுமியின் குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு அனுப்பிய கடித்தில் மனோகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கலெக்டர் வெங்கடாசலத்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மனோகரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News