செய்திகள்

பரமக்குடியில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2017-04-25 09:54 GMT   |   Update On 2017-04-25 09:54 GMT
பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:

பரமக்குடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அமுதா. இவர் நேற்று பரமக்குடி அருகே வைகைக்குளத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோன் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த அரியனேந்தலைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் அமுதாவிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமுதா பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து காளிதாஸை கைது செய்தார்.

Similar News