செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே பெண் மீது தாக்குதல்: ஆட்டோ டிரைவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள ரோசா நகரில் வசித்து வருபவர் அனிதா. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் டேவிட் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
பாக்கித் தொகையை திருப்பி தருமாறு டேவிட்டிடம், பல முறை அனிதா கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அனிதாவை தாக்கினார். இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்தனர்.