செய்திகள்

மாதவரம் அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை

Published On 2017-04-24 09:51 GMT   |   Update On 2017-04-24 09:51 GMT
மாதவரம் அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம்:

மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ராமலிங்கா காலனியை சேர்ந்தவர் காட்வின். கொளத்தூரில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் கதவை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்து தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் திறந்து இருந்த ஜன்னல் வழியாக சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் எல்.இ.டி. டி.வி.யை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Similar News