செய்திகள்
தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நூதன ஆர்ப்பாட்டம்
விவசாயகடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை ரெயிலடி முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கக்கோரி மகாத்மா காந்தியிடம் மனு அளிப்பது போல அவரது உருவப்படம் முன்பு கோரிக்கை மனுவைத்து நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பொய்யாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில செயலாளர் விஜய், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குமார், தஞ்சை ஒன்றிய தலைவர் நித்தியானந்தம், மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் நீலகண்டன் நன்றி கூறினார்.
தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கக்கோரி மகாத்மா காந்தியிடம் மனு அளிப்பது போல அவரது உருவப்படம் முன்பு கோரிக்கை மனுவைத்து நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பொய்யாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில செயலாளர் விஜய், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குமார், தஞ்சை ஒன்றிய தலைவர் நித்தியானந்தம், மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் நீலகண்டன் நன்றி கூறினார்.