செய்திகள்

ராயபுரத்தில் ஊழியரிடம் ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை

Published On 2017-04-22 09:04 GMT   |   Update On 2017-04-22 09:04 GMT
ராயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராயபுரம்:

ராயபுரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் தேசமணி. இவர் மன்னார்சாமி கோவில் தெருவில் உள்ள வங்கியில் ரூ.1½ லட்சம் எடுத்தார். பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு வேறு ஒரு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News