செய்திகள்
ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக ஆலோசனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திவருகிறார்.
சென்னை:
அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்று சென்னையில் தலைமை கழகத்தில் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனைகளாலும், அமைச்சர்களின் விமர்சனங்களாலும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திவருகிறார்.
இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க அணிகள் இணைப்பு முயற்சியில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் நிபந்தனைகள் போன்றவை குறித்தும் இரட்டை இலை சின்னம் மீட்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்று சென்னையில் தலைமை கழகத்தில் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனைகளாலும், அமைச்சர்களின் விமர்சனங்களாலும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திவருகிறார்.
இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க அணிகள் இணைப்பு முயற்சியில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் நிபந்தனைகள் போன்றவை குறித்தும் இரட்டை இலை சின்னம் மீட்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.