செய்திகள்

செங்கம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: மாணவர்கள் மறியல்

Published On 2017-04-17 11:56 GMT   |   Update On 2017-04-17 11:56 GMT
செங்கம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம்:

செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் போளூர் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை அமைக்க சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனாலும், மதுக்கடை அமைக்க தீவிர முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மறியல் கைவிடப்பட்டது.

Similar News