செய்திகள்

விழுப்புரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2017-04-12 12:28 GMT   |   Update On 2017-04-12 12:28 GMT
விழுப்புரத்தில் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதில் மறுப்பு தெரிவித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள இளங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெபிந்தா(வயது 21). இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் பன்னீர்(28). ஜெபிந்தா அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவரை வழிமறித்து தனது ஆசைக்கு இணங்குமாறு பன்னீர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு மறுப்பு தெரிவித்தால் ஜெபிந்தாவை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

இதுகுறித்து ஜெபிந்தா விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீரை கைது செய்தனர்.

Similar News