செய்திகள்
மதுரை பேக்கரி கடையில் வேலை பார்த்த கேரள வாலிபர் தற்கொலை
தந்தையும் தாயும் இறந்து விட்டதால் மனவேதனையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் மோனன். இவரது மகன் சஜீத் (வயது 22). இவர் மதுரை கே.புதூரில் உள்ள பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார். இதற்காக பேக்கரி கடையின் அறையிலேயே தங்கியிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் சமீபத்தில் அவரது தாயும் இறந்தார். இதனால் மனவேதனையுடன் இருந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த சஜீத் பேக்கரி அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.