செய்திகள்

அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் திடீர் விரிசல்

Published On 2017-04-11 05:10 GMT   |   Update On 2017-04-11 05:10 GMT
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெமினி பாலம் அருகே ஆயிரம் விளக்கு பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி பாலத்தின் இரு திசைகளிலும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.



விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு மெட்ரோ நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் உடனடியாக வந்தனர். இதனையடுத்து, விரிசலை சரிசெய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



விரிசல் விரைவில் சரிசெய்யப்படும் என்று என மெட்ரோ நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் அதிகம் செல்லும் முக்கிய சாலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News