செய்திகள்

தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2017-04-09 13:13 GMT   |   Update On 2017-04-09 13:13 GMT
தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர், அவரது தாய் மற்றும் சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி:

தேனி அருகே வீரபாண்டி கிழக்குதெருவை சேர்ந்த முருகன் மகள் கருப்பாயி(வயது28). இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிதம்பரம் கிழக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

தற்போது மேலும் 10 பவுன் நகை வாங்கி வரவேண்டும் என கருப்பாயியை கணவர் மணிகண்டன், அவரது தாய் மற்றும் சகோதரர் சித்ரவதை செய்து வந்துள்ளனர். நகை வாங்கி வந்தால்தான் வீட்டுக்குள் வரவேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதுகுறுத்து கருப்பாயி தேனி நீதித்துறை நடுவரிடம் புகார் அளித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி வரதட்சணை கொடுமை செய்த மணிகண்டன் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News