செய்திகள்

உழவர்கரையில் பழைய இரும்பு வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-04-07 11:23 GMT   |   Update On 2017-04-07 11:23 GMT
உழவர்கரையில் பழைய இரும்பு வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை மேரி உழவர்கரை புஷ்பம் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). இவர் ரெட்டியார் பாளையத்தில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பேப்பர், அட்டை வாங்கும் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஆனந்தீஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள கருப்பசாமி குடும்ப செலவுக்கு பணம் எதுவும் கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.

திருமண வயதில் மகள்கள் மற்றும் மகன் உள்ள நிலையில் இவ்வாறு ஊதாரித்தனமாக மது குடித்து செலவழித்து வந்தால் அவர்களை எப்படி கரை சேர்க்க முடியும்? என்று கண்டித்து வந்தார்.

ஆனால், கருப்பசாமி அதனை காதில் போட்டு கொள்ளாமல் வழக்கம் போல் நேற்றும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்- மனைவி இடையே இது தொடர்பாக குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கருப்பசாமி வீட்டின் மாடி அறைக்கு சென்றார். ஆனால், வெகு நேரம் ஆகியும் சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் ராஜா மாடி அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கருப்பசாமி மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News