செய்திகள்
மாமியார் வீட்டில் மின்துறை ஊழியர் துக்குபோட்டு தற்கொலை
புதுவையில் மின்துறை ஊழியர் மாமியார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தர்மாபுரி அகத்தியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது48), மின்துறை ஊழியர். இவருக்கு அனுராதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையே செந்தில்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று தனது மனைவி மற்றும் மகன்-மகளுடன் வாணரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை செந்தில்குமார் தனது குடும்பத்துடன் அருகில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் செந்தில்குமார் மட்டும் மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் அறையில் செந்தில்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் ஞானசேகரன், இவரது மனைவி சுகந்தி (வயது35). இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவனிடம் கோபித்து கொண்டு சுகந்தி குழந்தையுடன் புதுவை தர்மாபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று ஞானசேகரன் மாமியார் வீட்டுக்கு வந்து மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் சுகந்தி அதற்கு மறுத்து விட்டார். இதனால் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க ஞானசேகரன் குழந்தையை அழைத்து சென்று விட்டார். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே செல்போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுகந்தி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை தர்மாபுரி அகத்தியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது48), மின்துறை ஊழியர். இவருக்கு அனுராதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையே செந்தில்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று தனது மனைவி மற்றும் மகன்-மகளுடன் வாணரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை செந்தில்குமார் தனது குடும்பத்துடன் அருகில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் செந்தில்குமார் மட்டும் மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் அறையில் செந்தில்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் ஞானசேகரன், இவரது மனைவி சுகந்தி (வயது35). இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவனிடம் கோபித்து கொண்டு சுகந்தி குழந்தையுடன் புதுவை தர்மாபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று ஞானசேகரன் மாமியார் வீட்டுக்கு வந்து மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் சுகந்தி அதற்கு மறுத்து விட்டார். இதனால் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க ஞானசேகரன் குழந்தையை அழைத்து சென்று விட்டார். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே செல்போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுகந்தி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.