செய்திகள்

திருபுவனையில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

Published On 2017-04-02 14:43 GMT   |   Update On 2017-04-02 14:43 GMT
திருபுவனையில் கடன் வாங்கி வீடு கட்டியதில் உரியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனி (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணனுக்கும் வீடு கட்டுவதற்காக அரசு நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இவருடைய பகுதியில் பழனி தனியாக வீடு கட்டினார். ஆனால், இவரிடம் போதிய பணம் இல்லை. எனவே கடன் வாங்கி வீடு கட்ட செலவு செய்தார்.

அந்த பணத்தை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் கடன்காரர்கள் நெருக்கினார்கள். நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்த பழனி உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்தார்.

இது தொடர்பாக திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், ஏட்டு ஏகாம்பரம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News