செய்திகள்

பாபநாசம் வங்கி ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2017-03-30 14:24 GMT   |   Update On 2017-03-30 14:24 GMT
பாபநாசம் அருகே அதிக வட்டி வசூலிப்பதாக கூறி தகராறு செய்து வங்கி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 38) வங்கி ஊழியர். இவர் நேற்று இதே பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 28) முருகானத்திடம் வங்கியில் அதிக வட்டி வசூலிப்பதாக கூறி தகராறு செய்து கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முருகானந்தம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றிய புகாரின் பெயரில் பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.

Similar News