செய்திகள்

களியக்காவிளை அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு

Published On 2017-03-30 14:18 GMT   |   Update On 2017-03-30 14:18 GMT
களியக்காவிளை அருகே தொழிலாளியை மிரட்டி அவரது சட்டப்பையில் இருந்த ரூ. 300 ஐ எடுத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ், (வயது 32), தொழிலாளி. நேற்று வேலைக்கு செல்வதற்காக களியக்காவிளை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் அங்கு வந்து விஜயராஜிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.

ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லையென கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அவரை மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்து ரூ.300-ஐ எடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து விஜயராஜ், களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.

Similar News