செய்திகள்

நாகர்கோவிலை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி மாயம்

Published On 2017-03-29 14:16 GMT   |   Update On 2017-03-29 14:16 GMT
நாகர்கோவிலை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி மாயமானார். இது குறித்து அவரது மனைவில் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி புதுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 25). இவர் குளச்சலில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். சமீபத்தில் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். பிறகு கடந்த 27-ந்தேதி மீண்டும் குளச்சலுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாலகிருஷ்ணன் சென்றார்.ஆனால் அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.

தனது குடும்பத்தினரையும் அவர் தொடர்பு கொண்டு பேசவில்லை. இதனால் அவரது மனைவி லாசினி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் குளச்சலில் உள்ள பாலகிருஷ்ணனின் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போதும் அவர்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பாலகிருஷ்ணன் மாயமானது பற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி லாசினி புகார் செய்தார்.

வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் ஆகியோர் இது பற்றி வழக்குப்பதிவு செய்தனர். மாயமான மீன்பிடி தொழிலாளி பாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News