செய்திகள்
ஆரல்வாய்மொழி போலீசில் காதலனுடன் பட்டதாரி பெண் தஞ்சம்
திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆரல்வாய்மொழி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 24). ஐ.டி.ஐ. முடித்து உள்ள இவர் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ள மடத்தில் ஒரு அரிசி கடை உரிமையாளரிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அவரது ஊரை சேர்ந்த வெண்ணிலா (வயது 23) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பி.எஸ்.சி. பட்டதாரியான வெண்ணிலா சென்னையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் செல்வகுமாரும், வெண்ணிலாவும் ஆரல்வாய்மொழிக்கு வந்தனர். அங்கு ஒரு கோவிலில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து விட்டு ஆரல்வாய்மொழி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதுபற்றி 2 பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 24). ஐ.டி.ஐ. முடித்து உள்ள இவர் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ள மடத்தில் ஒரு அரிசி கடை உரிமையாளரிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அவரது ஊரை சேர்ந்த வெண்ணிலா (வயது 23) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பி.எஸ்.சி. பட்டதாரியான வெண்ணிலா சென்னையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் செல்வகுமாரும், வெண்ணிலாவும் ஆரல்வாய்மொழிக்கு வந்தனர். அங்கு ஒரு கோவிலில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து விட்டு ஆரல்வாய்மொழி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதுபற்றி 2 பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.