செய்திகள்

கணவரிடம் போலீஸ் விசாரணை: பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-03-27 09:55 GMT   |   Update On 2017-03-27 09:55 GMT
சிந்தாதரிப்பேட்டையில் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை:

சிந்தாதரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் வசித்து வருபவர் மோகன், ரவுடி. இவரது மனைவி பத்மாவதி (வயது 42).

ஒரு வழக்கு சம்பந்தமாக மோகனிடம் விசாரணை நடத்த சிந்தாதரிப்பேட்டை போலீசார் வந்தனர். இதற்கு பத்மாவதி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென பத்மாவதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர்.

இது குறித்து சிந்தாதரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News