செய்திகள்

அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பெண்களிடம் ஓட்டு சேகரிப்பு

Published On 2017-03-27 09:50 GMT   |   Update On 2017-03-27 09:50 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனன் 42-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் பகுதியில் சென்று “இரட்டை மின்கம்பம்” சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனன் 42-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று “இரட்டை மின்கம்பம்” சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

அப்போது பெண்கள் நீங்கள் அமைச்சராக இருந்த போது எங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் எங்களுடைய வாக்கு “இரட்டை மின் கம்பத்திற்கு” என்று பெண்கள் உற்சாகத்துடன் கூறினர்.

அவருடன் வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று ஆதரவு திரட்டினர்.

Similar News