செய்திகள்

ஓசூர் அருகே வணிகவரி துறை இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி

Published On 2017-03-26 16:43 GMT   |   Update On 2017-03-26 16:43 GMT
ஓசூர் அருகே பைக் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வணிகவரி துறை இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் வசித்து வருபவர் ஜெபஸ்டின் ஸ்டீபன்(48). இவர் ஓசூர் வணிகவரி துறை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது குடும்பம் சென்னை கோல்டன் ஜார்ஜ்நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் நேற்று மாலை தனது பைக்கில் பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்புதுறை அலுவலகம் அருகே சென்ற போது எதிர்பாரதவிதமாக கட்டுபாட்டை இழந்த பைக் சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் தலையில் படுகாயமடைந்த ஜெபஸ்டின் ஸ்டிபனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News