கிருஷ்ணகிரி அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கணபதி நகரை சேர்ந்தவர் முருகன்(34) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மனோன்மணி(28). இவருக்கு தனது பெற்றோர் வீடு ஒன்று உள்ளது. இதில் மைத்துனர் மணிகண்டன்(21) வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி முருகன், மைத்துனர் மணிகண்டனிடம் சென்று வீட்டை பாகம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன் தனது மனைவி மனோன்மணியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்து மணிகண்டனை கத்தியால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டன் மற்றும் மனோன்மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்னர்.
இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர்.