செய்திகள்

ஓமலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2017-03-25 12:16 GMT   |   Update On 2017-03-25 12:16 GMT
ஓமலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 65 வயது முதியவர் பலி

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பலியானார்.

பலியான முதியவர் யார்? எந்த ஊரைச்செர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இவர் காக்கி பேண்டும், கறுப்பு கலர் சட்டையும் அணிந்து உள்ளார். விபத்தில் இறந்த முதியவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் யார் என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News