செய்திகள்

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? சென்னையில் சூதாட்டம்

Published On 2017-03-21 23:33 GMT   |   Update On 2017-03-21 23:33 GMT
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை மையமாக வைத்து, சூதாட்ட கும்பல், லட்சக்கணக்கில், பந்தயம் கட்டி சூதாட்டம் நடத்துவதாக, வாட்ஸ்-அப்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க.வினர் மூன்று அணிகளாக போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அணி சார்பில், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் களத்தில் நிற்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இரு தரப்பினரும், அ.தி.மு.க.வின் வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி தமிழக மக்களிடம், பலமாக எழுந்துள்ளது. அனைவரும் ஆர்வமாக இதற்கான விடையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை மையமாக வைத்து, சூதாட்ட கும்பல், லட்சக்கணக்கில், பந்தயம் கட்டி சூதாட்டம் நடத்துவதாக, வாட்ஸ்-அப்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையா? என்று போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Similar News