செய்திகள்

ஆத்தூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2017-03-21 10:16 GMT   |   Update On 2017-03-21 10:16 GMT
ஆத்தூர் சந்தையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தையங்கோட்டை ஆத்தூர், கலிக்கம்பட்டி, பஞ்சம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நாட்டு தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகின்றது.

கடந்த 3 மாதம் முன்பு பயிடப்பட்டிருந்த நாட்டு தக்காளி தற்போது நன்கு விளைந்து அதிக அளவில் தக்காளி பழங்கள் காய்த்து குலுங்கும்போது சந்தையில் விலை திடீர் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமலேயே செடியிலே விட்டு வைக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தக்காளி நன்கு விளைந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு உண்டாகும் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

மருந்து செலவு, வேலை ஆட்கள் கூலி, தக்காளி பறிப்பு கூலி என கணக்கு பார்க்கும் போது நஷ்டம்தான் ஏற்படுகிறது என்றனர்.

Similar News