செய்திகள்
அரசு பள்ளியில் 384 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்
வத்திராயிருப்பு அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி உள்ளூர்பட்டி, மற்றும் வத்திராயிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினர்.
விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 384 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ஜெயா கிறிஸ்டிபாய், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.