செய்திகள்
சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு தா.பாண்டியன் ஆறுதல் கூறிய காட்சி.

சாதி கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: தா.பாண்டியன்

Published On 2017-03-20 11:20 GMT   |   Update On 2017-03-20 11:20 GMT
சாதி கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
சேலம்:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர் முத்துகிருஷ்ணன் இழப்பு பேரிழப்பாகும். இது போன்ற மரணம் கண்டிக்கதக்கது. சாதிய கொடுமையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நேற்று இன்று இந்த பிரச்சனை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை இருக்கிறது.

ஆதிக்க சக்திகள் துணிச்சலோடு இந்த பிரச்சனையை செய்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு காவலர்களை நம்பி பலன் இல்லை. அவர்களும் இதுபோல் பாதிக்கப்படுகிறார்கள்.

இங்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவமானப்படுத்தியது தமிழகத்திற்கே அவமானம். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை என்பதை நான் மீடியாக்களை பார்த்து தெரிந்து கொண்டேன். இது தான் எங்கள் நிலை.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

Similar News