ஒட்டன்சத்திரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் எரணம்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது27). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நீரேற்றும் நிலையம் அருகே நடந்து சென்றார்.
அப்போது 3 நபர்கள் அவரை வழிமறித்தனர். அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி வைரமுத்துவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம், செல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து அவர் ரெட்டியார்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ரெட்டியார்சத்திரம் தெப்பகுளத்துப்பட்டி எண்ணை ஆலை அருகே மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்று அவர்களை மடங்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வேடசந்தூர் சேடப்பட்டியை சேர்ந்த அருள்பாண்டி (23), அர்ஜூன் (20), ரெட்டியார்சத்திரம் பரத் (23) என்று தெரிய வந்தது.
இவர்கள்தான் எரணம்பட்டி வைரமுத்துவிடம் வழிப்பறி செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.