செய்திகள்

தேனி அருகே வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2017-03-20 10:55 GMT   |   Update On 2017-03-20 10:55 GMT
தேனி அருகே வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி மாலன்நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது52). இவரது கணவர் கடந்த 2 மாதங்ளுக்கு முன் இறந்து விட்டார்.

இதையடுத்து கடந்த வாரம் அவர் திண்டுக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கினார். அவரது வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று கதவை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து அவரது உறவினர்கள் முருகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 4 மோதிரம், 3 ஜோடி தோடு, வெள்ளி விளக்கு, குங்கும சிமிழ், வெள்ளிகாசு, ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அல்லிநகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News