செய்திகள்
கொலையுண்ட சிவக்குமார் 2-வது மனைவி பிரியா

சமையல் காண்டிராக்டர் கொலை: 2-வது மனைவி, தாய் சிக்கினர்

Published On 2017-03-20 09:31 GMT   |   Update On 2017-03-20 09:31 GMT
கும்மிடிப்பூண்டியில் சமையல் காண்டிரிக்டரின் கொலை தொடர்பாக அவருடைய 2-வது மனைவி மற்றும் தாயை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி, செயிண்ட் மேரிஸ் முதல் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). சமையல் காண்டிராக்டர். இவரது மனைவி ரேணுகா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி ஏரிக்கரையோரம் வசித்து வரும் பிரியாவை 2-வதாக சிவக்குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருமனைவிகளுடன் சிவக்குமார் குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த சில நாட்களாக சிவக்குமாருக்கும் 2-வது மனைவி பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் சிவக்குமார் திடீரென மாயமானார்.

2-வது மனைவி பிரியாவின் வீடும் வெளிப்புறம் பூட்டிக் கிடந்தது. வீட்டு முன்பு சிவக்குமாரின் மோட்டார் சைகிக்கிள் மற்றும் லோடு வேன் நின்றது.

சந்தேகம் அடைந்த முதல் மனைவி ரேணுகாதேவி இது குறித்து உறவினர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சிவக்குமாரின் 2-வது மனைவி பிரியா மாயவரத்தில் பெற்றோருடன் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மாயவரத்துக்கு விரைவ்நது சென்று பிரியா மற்றும் அவரது தாய்-தந்தை ஆகியோரை பிடித்தனர். அவர்களை கும்மிடிப்பூண்டி அத்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே சிவக்குமார் கொலை செய்யப்பட்டது எப்படி? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரம் தெரியவரும்.

சிவக்குமாரை பிரியா மட்டும் கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News