செய்திகள்
திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை - வாலிபர் வெறிச்செயல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரது உறவினரான குமார் என்ற வாலிபர், தன்னை திருமணம் செய்யக் கோரி தொடர்ந்து அந்தப் பெண்னை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அப்பெண்னை சந்தித்து மீண்டும் திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தியுள்ளார், இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரது உறவினரான குமார் என்ற வாலிபர், தன்னை திருமணம் செய்யக் கோரி தொடர்ந்து அந்தப் பெண்னை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அப்பெண்னை சந்தித்து மீண்டும் திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தியுள்ளார், இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.