செய்திகள்
திருபுவனை பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
திருபுவனை பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் திடீரென இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
திருபுவனை:
திருபுவனை பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் திடீரென இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
திருபுவனையை சுற்றி உள்ள கொத்தபுரி நத்தம், மத கடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், சன்னியாசி குப்பம், கலிதீர்த்தாள் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.
பலத்த காற்று வீசியதால் இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபோல் திருக்கனூர் பகுதியிலும் மிதமான மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக கோடை வெயிலால் அவதி அடைந்து வந்த இப்பகுதி மக்களுக்கு இந்த திடீர் மழை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.