செய்திகள்

மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் 50 பேர் கைது

Published On 2017-03-06 14:48 GMT   |   Update On 2017-03-06 14:48 GMT
இலவச மனைப்பட்டா கேட்டு மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவை ரோடியர்பேட்டில் 14 குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. அதோடு மனைப்பட்டாவும் வழங்கப்படவில்லை.

இதனால் அந்த குடும்பத்தினருக்கு வீட்டுமனைபட்டா வழங்க கோரி விடுதலைசிறுத்தை கட்சியினர் இன்று புதுவை கடலூர்சாலை ரோடியர்மில் அருகே உள்ள ரெயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலைசிறுத்தை கட்சியின் நகர செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விடுதலைசிறுத்தை கட்சியயினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Similar News