செய்திகள்

ராமநாதபுரத்தில் மளிகை கடையில் தீ விபத்து: ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2017-02-27 10:59 GMT   |   Update On 2017-02-27 10:59 GMT
மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் புலிக் காரத்தெருவைச் சேர்ந்தவர் கர்ணன். இவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்து சென்றார்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஜாபர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News