செய்திகள்

காங்கயம் அருகே விபத்து: கணவர் கண் முன்பு மனைவி பலி

Published On 2017-02-27 10:53 GMT   |   Update On 2017-02-27 10:53 GMT
காங்கயம் அருகே விபத்து கணவர் கண் முன்பு மனைவி உடல் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம்:

காங்கயம் குறுக்கத்தியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 62). இவரது மனைவி சுப்புலட்சுமி (52). ராமசாமி கணக்கம்பாளையத்தில் உள்ள கம்பெனியில் காவலாளியாக உள்ளார்.

இந்நிலையில் நேற்று ராமசாமியும், அவரது மனைவியும் மொபட்டில் குறுக்கத்தியில் இருந்து கணக்கம்பாளையத்திற்கு புறப்பட்டனர். காங்கயம்- ஊத்துக்குளி ரோடு நொய்யல் பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் சுப்பு லட்சுமி கணவர் கண் முன்பு உடல் நசுங்கி பலியானார். ராமசாமி படுகாயத்துடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

Similar News