செய்திகள்

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

Published On 2017-02-24 15:59 GMT   |   Update On 2017-02-24 15:59 GMT
ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
கோவை:

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமான இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். 

இந்த விழாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள், 

முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். 

தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் மோடியை கவர்னரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News