செய்திகள்

சாயல்குடி அருகே கடையில் கஞ்சா- மது விற்றவர் கைது

Published On 2017-02-21 14:37 GMT   |   Update On 2017-02-21 14:37 GMT
சாயல்குடியில் செவல்பட்டி செல்லும் சாலையிலுள்ள பெட்டிக் கடையில் கஞ்சா மற்றும் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடலாடி:

சாயல்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் சாயல்குடி செவல்பட்டி சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அந்தக்கடையை ஆய்வு செய்தனர். அக்கடையில் 8 மது பாட்டில்களும், 75 கிராம் கஞ்சாவும் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரித்ததில் அக்கடை உரிமையாளர் சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்கடை கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பழம் மகன் மாரிமுத்து என்றும் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. மாரி முத்துவை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து முதுகுளத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததில் அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்திரவிட்டார்.

Similar News