செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல்: புதுவையிலும் 22-ந் தேதி தி.மு.க. உண்ணாவிரதம்

Published On 2017-02-20 10:40 GMT   |   Update On 2017-02-20 10:40 GMT
தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது குறித்து புவையில் வரும் 22-ம் தேதி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:

தமிழக சட்டசபையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறி அதை கண்டித்து 22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இதே போல புதுவையிலும் உண்ணாவிரதம் நடைபெறும் என்று வடக்குமாநில தி.மு.க. அறிவித்து உள்ளது. இது தொடர்பாக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும், அங்கு நடந்த ஜனநாயக படுகொலையை கண்டித்தும் வடக்கு மாநில தி.மு.க. சார்பில் புதுவை தபால் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

22-ந்தேதி காலையில் இருந்து மாலை வரை இந்த போராட்டம் நடைபெறும். இதில் தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், மாணவர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News