செய்திகள்

தஞ்சையில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-02-20 10:24 GMT   |   Update On 2017-02-20 10:24 GMT
தஞ்சையில் கர்நாடக அரசு காவிரி குறுக்கே அணைக்கட்டுவதை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த மாதம் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றன.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர்.

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பு சார்பில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட போவதை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு நிர்வாகி பாரிவேந்தன் தலைமை தாங்கினார். ராஜூவ், பாலா, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News