செய்திகள்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னருடன் சந்திப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.
அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி. செம்மலை எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் விளக்கியதாக கூறப்படுகிறது.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடந்தது பற்றியும் அவர் கவர்னரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.