செய்திகள்

காசிமேட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - பெண் கைது

Published On 2017-01-30 11:00 GMT   |   Update On 2017-01-30 11:00 GMT
காசிமேட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

காசிமேட்டில் பல பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக காசிமேடு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் காசிமேடு சிங்கார வேலன் நகரில் உள்ள ராணி என்பவரின் வீட்டை அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம். இது தொடர்பாக ராணியை கைது செய்தனர்.

Similar News