செய்திகள்

நாகர்கோவிலில் தி.மு.க. பொதுக் கூட்டம்

Published On 2017-01-27 12:37 GMT   |   Update On 2017-01-27 12:37 GMT
குமரி மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவன் தலைமை தாங்கினார்.

சுமன் வரவேற்று பேசினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ், பிரேம்ஆனந்த், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். ஜோன்ஸ் ரூசோ, நெல்லை ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், தில்லை செல்வம், ஜோசப்ராஜ்,  தாமரை பாரதி, சாய்ராம், மதியழகன், சேக்தாவூது, சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்கர் நன்றி கூறினார்.

Similar News