செய்திகள்
கரூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குந்தானிபாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது40), லாரி டிரைவர். இவரும் ரவிசந்திரன் என்பவரும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிப்பர் லாரி வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
இந்நிலையில் டிப்பர் லாரி திருட்டு போய்விட்டது. இதனால்மனமுடைந்த அவர் குந்தானிபாளையம் சோமசுந்தரம் கிணறு அருகில் இருந்த வேப்பமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அவரது செல்லம்மாள் வேலாயுதம்பாளையம் போலீசுக்கு தகவல் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.