செய்திகள்
போராட்டம் முடிவு பெற்றது - தயவுசெய்து அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்: ஆர்.ஜே. பாலாஜி
வன்முறையில் ஈடுபடுவது தவறான ஒன்று, தயவுசெய்து அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள், போராட்டம் முடிவு பெற்றது என தனியார் வானொலி தொகுப்பாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தின் பல இடங்களில் வன்முறையாக மாறிவருகிறது.
போராட்டம் வெற்றி பெற்றதாக பிரபலங்கள் பலரும் அறிவித்துவரும் நிலையில் ஆர்ஜே பாலாஜி டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
போராட்டத்திற்கு அரசு செவிசாய்த்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளது, இதுவே நமது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன்.
வன்முறையில் ஈடுபடுவது தவறான ஒன்று, போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை சந்தோஷமாக கொண்டாடும் நிலையில் இவ்வாறு செய்வது கேவலமானதாக உள்ளது.
தயவுசெய்து அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள், போராட்டம் முடிவு பெற்றது என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தின் பல இடங்களில் வன்முறையாக மாறிவருகிறது.
போராட்டம் வெற்றி பெற்றதாக பிரபலங்கள் பலரும் அறிவித்துவரும் நிலையில் ஆர்ஜே பாலாஜி டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
போராட்டத்திற்கு அரசு செவிசாய்த்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளது, இதுவே நமது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன்.
வன்முறையில் ஈடுபடுவது தவறான ஒன்று, போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை சந்தோஷமாக கொண்டாடும் நிலையில் இவ்வாறு செய்வது கேவலமானதாக உள்ளது.
தயவுசெய்து அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள், போராட்டம் முடிவு பெற்றது என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.