செய்திகள்

புழல் அருகே ஆவின் பூத்தில் கொள்ளை

Published On 2017-01-22 12:41 GMT   |   Update On 2017-01-22 12:41 GMT
புழல் அருகே ஆவின் பூத்தில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:

புழலை அடுத்த கதிர்வேடு கலெக்டர் நகர் அருகே ஆவின் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை உரிமையாளர் சம்பந்தம் பூட்டிச் சென்றார். இன்று காலை கடையை திறக்க சென்றபோது ஷட்டர்பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ரூ. 3 ஆயிரத்து 800-ஐ காணவில்லை.

மேலும் கடையில் இருந்த நெய், பாதாம் பவுடர், பால்கோவா பாக்கெட்டுகளும் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரம் இருக்கும்.

இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News